தமிழிற்கினிய நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.
தங்களிடம் தமிழ் மொழிக் குறித்த சில வினாக்கள் ...................
கணியத்தமிழ் மென்பொருள் நிறுவனத்தலைவர் திரு சி.கபிலன் அவர்களிடமிருந்து......
1. ஒரு சொல் தமிழ்ச் சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா என்று தீர்மானிப்பது எப்படி?
2. ஒரு சொல் தமிழிலும்,வடமொழியிலும் வழுங்குமாயின் அது தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா, வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா எனத் தீர்மானிப்பது எப்படி?
3. 'நட்டம்' எனும் சொல் 'நடனம்' எனும் பொருளில் தமிழில் உள்ளது.இதை 'நஷ்டம்' எனும் சொற்பொருளில் பயன்படுத்துவது தவறு என்கிறார்கள். இது போல் தமிழில் வழங்கும் ஒரு சொல்லின் மேல் புதிய பொருளை ஏற்றி வழங்குவது தவறா..?
4. இலக்கண நெறிகளை காலந்தோறும் மாறுபட்டு வருவது இயல்பு. படைப்பாளரே மொழி வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.அவ்வாறு இருக்கையில் இலக்கணம் என்ற பெயரில் புதியன தோன்றுவதையும் தமிழ் மொழி விரிவடைவதையும் எவ்வளவு தூரம் மறுப்பது தகும்...?
5.புறச்சந்தி எனும் ஒற்று அவசியமா? அவசியம் எனில் , எங்கே போட வேண்டும் , எங்கே போடக்கூடாது, எங்கே விரும்பினால் போடலாம் என்பதை வரையறுக்கும் ஓர் இலக்கணத்தை வெளியிட வேண்டும்?
6.கிரந்த எழுத்துகள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் பயின்று வருகின்றன.ஆயினும் அது தமிழின் தன்மையை சிதைத்துவிடக்கூடாது என்பதற்காக ஊருக்குவெளியே உள்ள சேரியில் வைப்பதுப்போல் தமிழ் இலக்கணத்தில் சேர்க்காது வைக்கப்பட்டுள்ளது . இந்த மரபு தொடர்வதால் ஏற்படக்கூடிய பெருந்தீங்கு என்ன?
7.கலைச்சொற்களைத் தேடுவதில் காலத்தைக் கழிக்காமல் ஏதோ ஒரு தமிழ்ச் சொல்லைப்பயன்படுத்தி அறிவியல் கருத்துகளைத் தமிழ் நெஞ்சில் விதைத்தால், காலப்போக்கில் உரிய கலைச்சொற்களைத் தமது சிந்தனையின் போக்கிற்கும் தேவைக்கும் ஏற்ப தமிழர்கள் தாமே உருவாக்கிக் கொள்ளமாட்டார்களா..? கலைச்சொல் என்ற பெயரில் ஆங்கில மொழிச்சொற்களுக்கு இணைச்சொல் தேடுகிறார்களே..., இது தமிழ் மொழியை ஆங்கிலம் போலாக்கி அதன் தனித்தன்மையை அழித்துவிடாதா..?
8. ஒரு மொழிக்கு இலக்கணம் செய்வது எப்படி என்பது பற்றி தமிழறிஞர்கள் கருத்தினை வெளிப்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட இலக்கண விதிகளை வலியுறுத்துவதை விட ஆரோக்கியமானதாக இருக்கும் அல்லவா..?
முன்னைப்பழம் பொருட்டு முன்னைப்பழம் பொருள்
பின்னைப் புதுமைக்குப் பேர்த்தும் அப்பெற்றியனே...
எனச் சிவத்தைப்போல் தமிழும் இருமுனைச் சிறப்புகளிலும் ஓங்கி இருக்க வேண்டுமென்றே இந்த வினாக்களை எழுப்புகிறேன். தயவு செய்து விரிவான பதிலை அளிக்கவும்.
என்றும் மறவா அன்புடன் , சி.கபிலன்.
கணியத்தமிழ்
வழிநிலை - வெ.யுவராஜ்
18.7.08
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...

-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
